Saturday 11 June 2016

ருசி ஒழுகிய பொழுதில்

@ ருசி ஒழுகிய பொழுதில் @

பரீக்குட்டியின்
ப்ரணய ஜீவனின்
கடைசி துடிப்பு நிகழ்வு
ஒரு ஞாலத்தின் ஜென்மத்தை
குருதி ஒழுக வைக்கிறது

அகிலத்தின் பசிக்காக
ப்ரணய நாவின் சுவைக்காக
குடுவை உயிரின் மீதிக்காக
இச்ஜீவனின் கொலை
அகப்புனிதமாகிறது .

புல் தோகைகளை அறைத்து
கூழ் பழசு பல குடித்த,
என் பின்புழுக்கைகளை சுமக்க
இந்த விதிமண்டலத்தில் வழியில்லை .

ஏதோ ஒரு
புனித தேகப்பெருமூச்சு ,
என் பிந்தைய காலத்தில்
இல்லாமல் போயிருந்தால்,
நான் பிறவா பிறப்பே
அம்சமாய் இருந்திருக்கும் .

அழகுச்சொப்பணம்
அம்சப்பிரியம்
ஆடித்திரிந்த ஸ்பரிசம்
அசந்துபோன மரணக்களைப்பு
இவையே,
என் மரணத்திற்கு பிந்தைய மகிழ்வுகள் .

கருமை நிறைந்த என் சிறுநாக்கு
புல் திண்று பழகிய வரலாறு
இப்பேரண்டமே அனுமதித்த ஒன்று.

ஆட்டுக்குட்டியின் நாருசி
இறைச்சியை மதித்திருந்தால்
என்னவாயிருக்குமோ,
சில ஜென்மத்தின் நிலை .

பாவம் ,
பரீக்குட்டியின் ஆட்டுக்குட்டிக்கு
நம்மைபோல்
கொலை செய்யத்தெரியாது ..

- அதிரூபன்

No comments:

Post a Comment