Thursday 26 May 2016

ஆதித்தனிமையின் ஈரம்

ஆதித்தனிமையின் ஈரம்

-------------

மிருகக் காலடிச்சூட்டை
என் நாசி நிரப்பி
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது

ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,
என்னுரு மாறி அலகு நீண்டு
முளைத்த கண்களில் காடு பறக்கிறது

ஸ்தூல தேகத்து மரமுடிகளை
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி
முகமுடியின் இருட்டுக்குள்
பதுங்கியிருக்கிற பிறையை
ஈரத்துணி எடுத்து அழிக்க
மாயையின் விரலில் மேகத்தடங்கள்

காரிருள் பொழுதின் காட்டில்
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது

மியாவ் மீசையில்
ஒட்டியிருக்கிற மாமிசவாடை
எலிக்குஞ்சுகளின் சுவையை
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...

- அதிரூபன்

No comments:

Post a Comment