Monday 23 May 2016

ஒருகண மனக்காதல்

மனசுவிட்டு பேசுறதுக்கான கணத்த உன்னோட அருகாமை தான் கொடுத்துச்சு.
உயிருக்கும் உடம்புக்கும் இடைபட்ட தூரத்தில உன்னோட முகத்த நிரச்சுவச்சிடுக்கேன்.
எனக்கான ஒன்னு உன்னோட சிரிப்பில மறஞ்சே வாழ்றதுக்கான ரகசியத்த
ஒருதரயாது சொல்லிடு.
மனசு நெறஞ்சு வாழ்ற வாழ்க்கை சொர்க்கம்னு நீ சொன்ன வார்த்தைல தான்
என்னோட மனச தொலச்சிட்டேனு
என்னால நேர்படச் சொல்லமுடியல.
இன்னும் வார்த்தையாக்கப்படாத என்னோட உணர்வுக்குலாம் உன்னோட பெயர் தான் வச்சிடுக்கேன்.

எப்பவோ
அழும்போது பெய்யிறமழையில உன்னோட அன்பும் சேர்ந்தே விழுந்துச்சுன்னா எனக்கான உலகத்த உன்காலடில வரஞ்சுவச்சிடுட்டு செத்துப்போய்டனும்னு இப்பத்தோணுது மித்ரா.
இந்த அரூபமான காதல ரூபமா மாத்தக்கூடிய உன்னோட சம்மதம் இருக்கே, அது இந்த உலகத்துவிட பெரியது

பிரபஞ்சத்தோட அழிவுல இருந்து இன்னும் உயிர்ப்பா இருக்கிறது காதல் மட்டும்தான்னு நான் சொல்லைல
நீ தலையாட்டியது,
இப்பவும் எனக்கு முன்னால வீசுற காத்துல தெரியுது.
நீ பேசாத வார்த்தைல தான் என்னோட உயிர அடச்சுவச்சிருக்கேனு உணர்வுப்பூர்வமா சொல்றதுல அபத்தம் இல்லைனு நினைக்கிறேன்.
மனசுக்குள்ள வீசுற காத்துக்கு உன்மோகம் வந்திருக்குனு சட்டுனு என்னால சொல்லமுடியல.
உனக்குள்ள மூழ்கி கிடக்கிற என்னோட நினப்ப ஒருதர தொட்டுபார்த்த அப்படினா.,
நம்ம வாழ்க்கை அழகாகிடும்.

மித்ரா மித்ரா னு உன்பேருல இருக்கிற போதைய
எந்த ஆல்கஹால், நிக்கோடினோ கொடுக்காதுங்கிற மடத்தனத்த
காதல்னு  பிடிச்சு கொண்டாடுற நான்
பைத்தியக்காரனுக்கு மேலதான்

பொதுவா ஆணோ பெண்ணோ
காதலுல கெஞ்சவிட்டு கெடக்கிறதோட சுகவலிய
நானும் உணர்ந்திடுக்கேனு நினைக்கும்போது
கொஞ்சமா மனசு உன்கிட்ட கெஞ்சிறதுல தப்பில்ல தான் ..

காதல வெறும் கண்ணால மட்டும் காட்றதுல
என்ன நியாயம் இருக்குனு புரியல.

உயிர்வாழனும்னு விரும்புற உலகத்தோட பொதுபுத்தில இருந்து விழகி
உனக்காக சாகுறதுங்கிற அந்த கணத்த அழகுனு முழுசா என்னால நம்பமுடியல

உன் நிழலத் தொட்டுபாக்குற வாழ்க்கை
என்ன வாழவச்சிடும் மித்ரா

இந்த கடிதத்த உன்மனசு படிக்கும்ங்கிற நம்பிக்கைய
இந்த கணம் எனக்கு கொடுத்திருக்கு

கெஞ்சுறது மட்டுமே காதலுல அழகு இல்லடி ......

ப்ளீஸ்.....

--------------------

No comments:

Post a Comment