Saturday 5 March 2016

ஆதிவாசியாகிறவனின் பகல்

ஆதியநாட்களின் நிறம்

- - - - - - - - - -

வர்ணப்பூச்சித் தேடி அலையும் காட்டின்வழி முழுவதும்
பூ பறித்துச்சென்றவளின் பாதங்கள்,
தடத்தின் இருப்பை பார்வை தீண்டும் மதியப்பொழுதில்
சலங்கை கட்டிய நடனமெனத் தாவுகிறது முயல்குட்டி,
நிலா தெரிகிறச் சாயங்கால வனத்திற்குள்
நட்சத்திரத்தின் பெயர்சொல்லி விழுகிறது சருகுகள்,
காட்டுத்தோழியின் பார்வையில் சுருங்குகிறது
விரல்தொட அஞ்சுகிற தொட்டாச்சிணுங்கியின் தேகம்,
இப்போதுதான் சிறகடிக்க தொடங்கியிருக்கிறது
என் பெயர்சொல்லி பாடுகிற இரவுப்பறவை,
ஹார்மோனியத்தின் வாசனை
சருகுநொறுங்கும் ஒவ்வொரு கணத்திலும் தெரிக்கிறது,
காடொன்றை வரைந்து கொண்டிருக்கிற ப்ரஸ்ஸின் சாயத்தில்
ஒரு இலை அழுதுகொண்டுவிழுகுறது,

நான், ஆதியாகி பழைய நாட்களை மேய்ந்துகொண்டிருந்த சாமக்கனவில்,
ஒரு காடு தன்நிழல்மேல் நிறம்காட்டிச்செல்கிறது.

- அதிரூபன்.

No comments:

Post a Comment