Thursday 17 September 2015

சிதறிக்கிடக்கும் கவிதை

என் நேசத்தின் வெளியில்
ஒரு கவிதை சிதறிக்கிடக்கிறது.
அது,
ஒரு மழையின் துளியை உடுத்திக்கொண்டு
ஈரம் தோய்த்தவார்த்தைகளால்
தன்னை பலப்படுத்திக்கொள்கிறது.
சாதாரண புன்னகையொன்றை
அந்த கவிதைமேல் கிடத்த,
ஒரு யுகப்பிரம்மாண்டத்தின் சாயலில்
தன் அழகை மெருகேற்றிக்கொள்கிறது.
தெய்வாம்சம் பொருந்திய
மானுடப்பார்வையொன்றை,
அந்த கவிதைமேல் பொருத்த
தன் சுகந்த வரிகளால்
கொஞ்சம் நெழிகிறது.
ஒவ்வொரு சரிவிழும்
தன் சுயம்தெளித்து
விழுந்து எழுகிறது அக்கவிதை.
என் உடம்பின்
ஒட்டுமொத்த ரேகைகளிலும்
ஒரு கிறுக்கலாக எழுதப்பட்ட,
இந்த கவிதையின் வெளியில்
இப்போது
நான் சிதறிக்கிடக்கிறேன் .
- ச.விவேக்

2 comments: